By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் அபிவிருத்தி திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிநீர் அபிவிருத்தி திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குடிநீர் அபிவிருத்தி திட்டம்

Last updated: August 14, 2024 4:42 pm
August 14, 2024
89 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 13

 

 

அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவால் ரூ. 296.08 கோடி மதிப்பீட்டிலான நாகர்கோவில் மாநகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது நேற்றைய தினம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அரசு அ.இ.அ.தி.மு.க அரசு.  நாகர்கோவில் நகர மக்களின் நலன் கருதி புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது நகர மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி எப்பொழுதும் கிடைகின்ற வகையில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கினார்.  

 

இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதிகள் அனைத்தும் அன்றைய முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரால்  வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திட்டத்தின் வாயிலாக 2032-ம் ஆண்டு மக்கள் தொகையின் படி 3.20 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 41.12 மில்லியன் லிட்டர் மற்றும் எதிர்கால (2047) மக்கள் தொகையின் படி 3.90 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 52.04 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நாகர்கோவில் கிராம குடிநீர் திட்டம் தெரிவித்திருந்தது. 

ஆனால் இன்று (12-08-2024) நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் இத்திட்டத்தின் மூலம் 71 ஆயிரத்து 965 வீடுகள் மற்றும் 3.20 இலட்சம் மக்கள் பயன் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2032-ம் ஆண்டு மக்கள் தொகையின் படி தான் 3.20 இலட்சம் மக்கள் பயன் பெறுவதாகவும், எதிர்காலத்தில் 2047-ம் ஆண்டில் தான் 3.90 இலட்சம் மக்கள் பயன் பெறுவதாக அதிகாரபூர்வமாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்து இருக்கிறது.  விவரங்கள் இவ்வாறு இருக்க மக்களுக்கு தெரிவிப்பதில் ஏன் இந்த குளறுபடி.  உண்மைக்கு மாறாக தகவல்கள் விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கிறது.  மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் அடைய முயல்கிறீர்களா? 

மேலும் 06-10-2023 அன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்ட பல்வேறு துறைகளின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தில் 39-வது பக்கத்தில் இக்குடிநீர் திட்டத்தின் மூலம் 85 ஆயிரம் வீடுகளுக்கு HSC இணைப்புகளில் 53 ஆயிரத்து 769 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதில் எது உண்மை தெளிவு படுத்துங்கள்.  இன்றைய நிலையில் உண்மையாக எத்தனை மக்கள் பயன் பெறுகிறார்கள்.  எத்தனை வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு தெளிவாக தெரியுங்கள்.  அதைவிட்டு மக்களை குழப்பும் முயற்சிகளை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு பெருஞ்சாணி கிராமத்தின் அருகே புத்தன் அணையின் மேல்புறம் உள்ள பரளியாற்றில் 8 மீட்டர் விட்டம் உள்ள நீர் எடுக்கும் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து மேற்பரப்பு நீரை 130 HP மின் இயந்திரம் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள 41.12 MLD புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.  சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 12.10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியிலும், இதைப்போன்று 6 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு மூன்று பிரதான உந்து குழாய்கள் மூலம் 31.01 கிலோ மீட்டருக்கு உந்தப்பட்டு, 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மாநகராட்சியின் 27 மண்டலங்களுக்கு 475.66 கிலோ மீட்டர் பகிர்மான குழாய்கள் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு நேற்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட  மாநகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த  அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
தொண்டு நிறுவன தலைவருக்குராஜ கலைஞன் விருது!!
நிழல் தாங்கல் மணிமண்டப கோபுரம் அடிக்கல்
ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் ஒரே பணி ஒரே கல்வி இருந்தும் ஒரே ஊதியம் வழங்காததை கண்டித்து மதுரையில் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை

November 19, 2024
49 Views
குமரன் 93 வது நினைவு நாள் அனுசரிப்பு
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 31, 33, 34 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account