திருவெண்ணெய்நல்லூர், ஜன. 15 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் மகாலிங்கம் (70). இவர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசை நோக்கி வந்த கார் இவர் மீது மோதி பலத்த காயமடைந்தார்.
இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அழகிரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


