நாகர்கோவில் செப் 17
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் சுடுகாடு, இடுகாடு வேண்டும், குடிநீர் வசதி வேண்டும், சாலை செப்பனிட வேண்டும். பேருந்து வசதி வேண்டும் என ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல மனுக்கள் அனைத்தும் கிடப்பில் போடபட்டு வருகிறது. ஆனால் ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட காரியான் கோணம் கிராமத்தில் சுடுகாடு. இடுகாடு வசதிகள் இருந்தும் கூட 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார சுடுகாடு கொண்டு வர அரசு தரப்பில் முடிவு செய்யபட்டு கடந்த 2021 ஆம் ஆண்டில் முதற்கட்ட ஆய்வு பணிகளில் அதிகாரிகள் இறங்கிய போது, கிராமக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது . அன்றைய அரசு நிர்வாகம் கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும் என அறிவித்தார்கள் ஆனால் இதுவரை கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தாமல் திடீரென 2 தினங்களுக்கு முன்பு வந்து மீண்டும் அதிகாரிகள் மின்சார சுடுகாட்டிற்கு நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீரக்கும் நாள் கூட்டத்தில் ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட காரியான் கோணம் உள்ளிட்ட 14 கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் தொடர்ந்து தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது . இது குறித்து ஊர்மக்கள் கூறுகையில், தேவை யில்லாத ஊரில் அரசின் திட்டம் கொண்டு வந்து புகுத்துவது ஏன் ? 10 கோடி மதிப்பீட்டில் திட்டம் என்பதால் அதில் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஞாலம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ள மணலை கைப்பற்றும் நோக்கில் தான் இந்த திட்டத்தை கொண்டு வந்து உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்