திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டப்பாளையம் ஊராட்சி மன்றத்தின் உட்கடையான D.கரிசல்குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் அறிவுரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தி பிச்சை தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் வேளாண்மை துறை அலுவலர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத் திமுக விவசாய அணித்தலைவர் அண்ணாதுரை பொட்டப்பாளையம் திமுக கிளைச்செயலாளர் R சுப்ரமணி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலர் வீரணன், ஊராட்சியின் திட்டப் பணிகள் 2024 -2025 ஆண்டுக்கான அறிக்கைகளை முறையே எடுத்துரைத்தார். அதன் பின்னர் உறுதிமொழி பருவமழை தொடங்குவதை முன்னிட்டு குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சாலைகளை தூய்மையாக பாதுகாக்கவும் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதை தவிர்த்து டெங்கு கொசு பரவாமல் தடுக்க வேண்டும் எனவும் கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொட்டப்பாளையம் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.