கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் நிலப் பிரச்சினை தொடர்பாக லஞ்சம் பெற்றதாக வீரன்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் அகத் தூயவன் கைது
கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது நிலப் பிரச்சினையை சரிசெய்வதற்காக ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமிற்கு வந்திருந்தார்.
அப்போது வீரன்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அகத்தூயவன், வடிவேலிடம் பட்டாவில் பெயர் திருத்தம் சரிசெய்வதாகக் கூறி ரூபாய் 4000 லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து அகத்தூயவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.