நாகர்கோவில் மார்ச் 8
உலக மகளிர் தினத்தை ஒட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்.
மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் வார்த்தைகளுக்கு ஏற்ப பெண் என்ற பிறவி மிக சிறப்பான ஓன்று. எங்கள் தாயாக, சகோதரிகளாக, ஆசிரியர்களாக சமூகத்தை உங்கள் நல்லுள்ளதாலும், கருணையாலும் வழி நடத்தி வருகிறீர்கள். பெண்ணின்றி அமையாது உலகு என்ற சொல்லுக்கேற்ப புவியினை நீங்கள் இயக்கி வருகிறீர்கள்.
உங்கள் திறமையாலும் அன்பினாலும் எந்த ஒரு மனிதனையும் மாற்றும் சக்தியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குடும்ப தலைவிகளாக மட்டுமின்றி இன்று எந்த ஒரு துறையிலும் பெண்களின் ஆதிக்கம் வியக்கும்படி உள்ளது. இது தொடர வேண்டும். ஆண் பெண் சமத்துவம் காக்கப்பட வேண்டும்.
பெண்களின் பெருமையை நாம் பேசும் பொழுதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிக பெரிய நிர்பந்தம் நமது சமூகத்திற்கு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் லட்சியம் நம் அனைவருக்கும் வேண்டும். பெண்ணின் பெருமை மற்றும் பெண்களின் பாதுகாப்பை நாம் எடுத்து அனைவருக்கும் கூறுவோம்.