தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வைத்து நெப்போலியன் கிரிக்கெட் கிளப் சார்பில் மாநில அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டிகள் சங்கரன்கோவில் ஶ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வைத்து நடந்தது. 4 நாட்கள் நடந்த இந்த போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 13 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை
ரூ.25,000 ரூபாயை மிராக்கிள் கடையநல்லூர் அணியும், 2ம் பரிசு ரூ.20,000 ரூபாயை சங்கரன்கோவிலை சேர்ந்த நெப்போலியன் அணியும், 3ம் பரிசு ரூ.15,000 ரூபாயை சங்கரன்கோவிலை சேர்ந்த ஜஸ்ட்டர்ப் அணியும், 4ம் பரிசு ரூ.10,000 ரூபாயை பாவூர்சத்திரம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றனர். கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்திக், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி மற்றும் திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics