சுசீந்திரம்.மார்ச்.26
கன்னியாகுமாரி மாவட்டத்திலே பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் உட்பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயருக்கு மாதம் தோறும் ஆஞ்சநேயர் பிறந்த மாதமாக நம்பப்படும் மூல நட்சத்திரத்தன்று முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார தீபாதரனை நடைபெறுவது வழக்கம் அதுபோல நேற்று முன்தினம் ஆஞ்சநேயருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்பு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டு துளசி மாலை வெற்றிலை மாலை வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது இதில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்



