மானாமதுரை:ஏப்:19
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அரிமண்டபம் , சின்னக்கண்ணனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 ஆதிதிராவிடர் உள்ளிட்ட மொத்தம் 84 நபர்களுக்கு
இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியானது வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார், ஆகியோர் தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இந்த பிரச்சினையானது மிகவும் நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தீர்த்து வைத்துள்ளார் எனவும் இத்தகைய செயல்பாடுகள், நலத்திட்டங்கள் கடந்த பத்தாண்டுகால ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்படவே இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது தமிழக முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரது திராவிட மாடல் ஆட்சியில் மாவட்ட அமைச்சரான தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டலோடு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில்
நகர் பொன்னுச்சாமி ஒன்றியக்கழக செயலாளர்கள் துரை. இராஜாமணி, வழக்கறிஞர் அண்ணாத்துரை , மாவட்ட
மகளிரணி துணை அமைப்பாளர் வளர்மதி கலைச்செல்வன், நகர்க்கழக திமுக நிர்வாகிகள் தேசிங்குராஜா, சிவாஜி, உள்ளிட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.