வேலூர், ஜன. 08 –
வேலூர் மாவட்டத்தில் ரூ.3000 த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் சேர்த்து முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை இன்று முதல் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 699 ரேஷன் கடைகள் மூலம் 4,55,498 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் விழாவில் பேசியபோது: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மக்களுக்கு 3000 ரூபாய் வழங்குவது அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பது எங்களுக்குத் தான் தெரியும். எது எடுத்தாலும் ஆயிரம் பொங்கல் வந்தால் 3 ஆயிரம். தேர்தல் வந்தால் எதுவும் இல்லை. ஆனால் அது அவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது.
இவ்வளவு செய்கிற அரசாங்கம் நீடிக்க வேண்டுமென சொல்கிறோம். அதனால் தான் உங்கள் ஆதரவை கேட்கிறோம். அதனால் தான் உங்களுக்கு 3000 ரூபாயை தளபதி வழங்குகிறார். அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டியது உங்கள் கரம் என்று பேசினார். தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காகவே 3000 ரூபாய் அளிக்கப்படுவதாக அமைச்சர் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது



