சென்னை பெருநரக வளர்ச்சி குழுமம் சார்பில் மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலை வெள்ளானூர் சர்வீஸ் சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தலைவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மோரை கோ.தயாளன், வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி அ.பிரபாகரன் ஆகியோர் உட்பட
நகர்ப்புற வளர்ச்சித்துறை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உட்பட அரசு அதிகாரிகள் ஒன்றிய துணைச் செயலாளர் மாவட்ட பிரதிநிதி பம்மதுகுளம் வி.பி. அண்ணாதுரை, காண்ட்ராக்டர் முத்தையா, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.