நாகர்கோவில் ஆக 21
இன்று திருவனந்தபுரதில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று பிற்பகல் 3.25 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டும்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயம் புகழ்பெற்ற புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழா
நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில், வேளாங்கண்ணி தேவாலயமும் ஒன்றாக உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி வரை இந்த திருவிழா கொண்டாடப்படும்
அதன்படி இந்த ஆண்டு வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இங்கு நடக்கும் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். தெற்கு ரயில்வே சார்பில், வேளாங்கண்ணியில் திருவிழா காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
அந்த வகையில் வேளாங்கண்ணி மாதா பேராலயம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து இன்று ஆகஸ்ட் 21, 28 மற்றும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி இந்த
சிறப்பு ரயில் (வண்டி எண்.06115), பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமர்க்கமாக வரும் ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆகிய நாட்களில் வேளாங்கண்ணியில் இருந்து இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06116) இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.
நின்று செல்லும் ரயில் நிலையங்கள்
நெய்யாற்றின்கரை, குழித்துறை, ரணியல், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, வள்ளியூர், கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.