மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் பகுதியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கெளரவப் படுத்தும் விதமாக பேண்ட் வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு முன்னாள் மாணவர்களால் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.
மேலும் தமிழகத்தில்
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என முன்னரே பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா பானு தலைமையில் நடைபெற்ற
இந்த விழாவில் பள்ளியில் படித்த முன்னால் மாணவர்களும் பள்ளியின் முன்னால் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்வாக முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டும் விதமாக நினைவு பரிவுகள் வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.அதன் பின்னர்
நிகழ்ச்சியில் மாணவர்கள் செல்போனுடன் நேரத்தை வீணாக்காமல், எவ்வாறு நேரத்தை நல்லவிதமாக, பயன்படுத்தலாம் என்றும் மாணவர் திறன் வளர்ப்பு நிகழ்வாக முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்கை முறையை நாடாகமாக மணவர்கள் நடித்து காட்டி தங்களை வளர்த்து கொள்ள விழிப்புணர்வு நாடகம் நடத்தி அனைவரையும்
மகிழ்வித்தனர்.