கோவை நவ:07
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்க தொடர்ந்து
36 மணிநேர கலாச்சார கலைநிகழ்ச்சிகள் பாலக்காடு ரோடு மின்னல் மகாலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி நவம்பர் 9,10 தேதிகளில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை, தொடர்ச்சியாக 36 மணிநேரம் நடைபெற உள்ளது.
இது பற்றி நிகழ்ச்சியின் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வ மணிகண்டன் கூறியதாவது: தொடர்ந்து நடைபெறும் சாதனை நிகழ்ச்சிக்கு மின்னல் சீனிவாசன் அவர்களின் தலைமையில் பல்வேறு தரப்பு கலைஞர்களை ஒருங்கிணைத்து, இசை, நடனம், நகைச்சுவை பேச்சு, பல குரல் கலை நிகழ்ச்சி,யோகா, தற்காப்பு கலைகள் என பல்வேறு வகையான திறமையாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமையப்போகிறது.
பங்குபெறும் ஒவ்வொருவரும் சாதனைகளை முறியடிக்கும் முயற்சியில் பங்களிப்போடு போட்டியிடுகின்றனர்.மேலும், ஆர்வமுள்ளவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறலாம். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இதுவொரு சிறந்த. வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும் உலக சாதனையில் கலந்து கொள்ளும் திறமையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கான பதிவுகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு, ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.