மதுரை ஏப்ரல் 06
மதுரை விமான நிலையத்திற்கு வந்த மத்திய ரயில்வே துறை
அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவிற்கு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக விமான நிலையத்தில் பூரண கும்ப மரியாதை செலுத்தி பாஜக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய போது ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
பாம்பன் கடல் பாலம் முதல் செங்குத்தான கடல் பாலம். நமது பொறியாளர்கள் மூலம் கட்டமைக்கப்பள்ளது இது போன்ற முக்கிய பாலங்களைக் கட்டியதற்கும், தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்ததற்கும் பிரதமருக்கு நன்றி சொல்கிறேன்.
மேலும்
மதுரை ரயில் நிலையத்தையும் பார்க்க உள்ளேன், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்க்க உள்ளேன். உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் அதை மீண்டும் கட்டமைக்க பார்வையிட உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பாஜக மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, சிவலிங்கம், ஆகியோர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.