சென்னை, அக்டோபர்-10, தமிழ்நாடு பி .எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக மாணவர்கள் கல்வி நலன் சார்ந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜஸ்தான் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பி எட் காலனி பட்டர் அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் குமரேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
கணினி அறிவியல் பாடத்தை 6ஆம் வகுப்பு வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வர வேண்டும் . மற்ற பாடங்களை போன்று கணினி அறிவியல் பாடத்திற்கும் படத்திற்கும் பாட வேளை ஒதுக்கித் தர வேண்டும். மத்திய அரசு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணனி ஆய்வகங்கள் அமைக்கவும் அதற்கு கணினி பயிற்றுநர்களை நியமிக்க செய்யவும் வழங்குகிறது.
இதை முறையாக பயன் படுத்த வேண்டியும், கணினி அறிவியல் பி.எட் படிப்பை முடித்த 60,000 கணினி பட்டதாரிகளுக்கு பணியினை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தினார்.