குளச்சல், மார்- 23
வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அந்த கல்லூரி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வெள்ளிச்சந்தை சப் இன்ஸ்பெக்டர் குமார் என்பவருக்கு தகவல் கிடைத்தது. புகாரின் பேரில் போலீசார் நேற்று கல்லூரி பகுதியில் சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது மூன்று பேர் பைக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டது மூன்று பேரும் சிதறி ஓடினர். அப்போது இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்தனர். ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட இரண்டு பேரிடம் விசாரித்த போது அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் குருந்தன்கோடு இந்திரா நகரை சேர்ந்த சரவணன் (20) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரெண்டு பேரையும் கைது செய்தபோது சார் அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.