நாகர்கோவில் டிச 4
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவுபடி, வேலிமலை வனச்சர அலுவலர் இராஜேந்திரன் தலைமையில் சரக பணியாளர்களுடன் வெள்ளமோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேளிமலை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட
வெள்ளமோடி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த வாகனத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்ததுடன் தப்பி ஓடவும் முயன்றனர். எனவே அவர்களையும் வாகனத்தையும் மடக்கி பிடித்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்திற்குள் மண்ணுளிப் பாம்பு பையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மண்ணுளிப் பாம்பை கடத்தி வந்தவர்களையும், வாகனத்தையும் வேளி மலை வனச்சரகு அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்ததில், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலையை சேர்ந்த கிரண் 35,
சுபாஷ் 45 எனவும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மண்ணுளிப் பாம்பு விற்பனைக்காக வாங்கியதாகவும், வேறு யாருக்காவது கைமாற்றி விட்டால் இன்னும் அதிக விலையும் லாபமும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர் . அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்கின்ற கோணத்தில் வனத்துறையினர் புலன் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவுப்படி பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோயில் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர் . இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கும்போது இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் வனச் சட்டங்களுக்கு உட்பட்டு கடுமையாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மண்ணுளிப் பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.