சங்கரன்கோவில். ஆக.22.
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதியதாக 2 நவீன ரக பேருந்துகள் வழங்கப்பட்டது. இதனை பயணிகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி தற்காலிக பேருந்து நிலையத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி போக்குவரத்து கழக கூட்டாமை வணிக துணை மேலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருநெல்வேலி போக்குவரத்து துறை சட்ட உதவி மேலாளர் மாரியப்பன், சங்கரன் கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளர் பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், தொமுச மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 2 புதிய ரக பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை தொமுச தலைவர் குருசாமிராஜ், செயலாளர் சங்கர் ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, விவசாய அணி துணை அமைப்பாளர் ஸ்ரீகுமார், நகர துணை செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் விஜயகுமார் ,செல்வராஜ், ராஜாஆறுமுகம்,வீராச்சாமி, தொமுச சங்கரன்கோவில் கிளை நிர்வாகிகள் காந்திமதிநாதன் பண்டார கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.