களியக்காவிளை, டிச- 18
குமரி மாவட்டத்தில் இருந்து போலி பாஸ் மூலம் கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க குமரி மாவட்ட கலக்டர் மற்றும் எஸ்.பி உள்ளிட்டோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று 17-ம் தேதி காலை விளவங்கோடு தாசில்தார் ஜூலியன் மற்றும் போலீசார் களியக்காவிளை செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்தனர்.
இதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் பளுகல் அருகே மாங்காலை பகுதியில் கனிம வளங்கள் கொண்டு செல்ல பாஸ் எடுத்திருந்தது தெரிய வந்தது. இதனை பயன்படுத்தி கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


