நாகர்கோவில் டிச 22
கன்னியாகுமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியை சார்ந்த ஜெயரீஷ்
மூளைச்சாவு ஏற்பட்டு மரணமடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.
நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். போட்டோகிராபர். இவரது மகன் ஜெயரீஸ் சென்னையில் பல்கலைக்க ழகத்தில் படித்து வந்தார். சென்னை யில் நடந்த சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அவரது உடல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று அன்னராது உடலுக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி
மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.