ஈரோடு மே 2
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மண்டல கூட்டம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். பேரவை முதன்மை பொது செயலாளர் நாராயணசாமி முன்னிலையில் வைத்தார் .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் .தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும் போக்குவரத்து துறையில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாள் ஒன்றே அவர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் பேரவை கௌரவ தலைவர் பன்னீர்செல்வம், மண்டல பொதுச் செயலாளர் துரைசாமி, மண்டல தலைவர் ரவி, பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் திருச்செல்வம், மக்கள் ராஜன் ,சரவணன் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics