ஈரோடு மே 15
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன உரிமைச்சட்டம் – 2006 யை அமல்படுத்துவது தொடர்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.