மதுரை பிப்ரவரி 18,
மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
மதுரை எம். ஜி. ஆர் சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக தலைவர் சின்னமாயன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்ததாவது; மதுரை மாட்டுத்தாவணியில் போக்குவரத்து நெருக்கடியின் மத்தியில் 24 மணி நேரமும் அதிக ஒளி ஓசையுடன் பூ மார்க்கெட் நெல், பழம், காய்கறி மார்க்கெட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், சரவணா ஸ்டோர் என செயல்படும் இடத்தில் டைட்டல் பார்க்க அமையும் இடம் அமைதியான சூழலில் அமைக்கப்படும் என படித்தவர்களுக்கு தெரியாதா? இச் சூழ்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் 2010 ஆம் ஆண்டு மாட்டுத்தாவணியில் காய்கறி மார்க்கெட் கொடுக்கப்பட்டு அரசாணை வெளியிட்ட இடத்தில் டைட்டல் பார்க் அமைக்க அரசு முயற்சி செய்வது தென் மாவட்ட விவசாயிகளையும், வியாபாரிகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது திட்டமிடாமல் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அதிக போக்குவரத்து நெருக்கடிகள் செயல்படுகிறது. மேலும் வாகன காப்பகம் இல்லாமல் வெங்காய மார்க்கெட் அமைந்தால் மேலும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் விதிமீறல்கள் அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டுத்தாவணியில் டைட்டல் பார்க்க அமைக்கும் முடிவை தாங்கள் மறுபரிசீலனை செய்து மாற்று இடத்தில் அமைக்க வேண்டிய தற்காலிக மார்க்கெட்டை மேம்படுத்துவது சாத்தியமற்றது. எனவே தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரமான நிரந்தர காய்கறி மார்க்கெட் (G.O.M.S.182/2010) திட்டத்தை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசாணையின் படி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உடன் நிர்வாகிகள் செயலாளர் கிருஷ்ண பாண்டி, துணைத் தலைவர் அன்புச் செழியன், துணைச் செயலாளர் பாண்டியராஜன், சங்க உறுப்பினர்கள் முத்து, கார்த்திக், விஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.