தஞ்சாவூர் ஜூலை 11
தஞ்சாவூர் டைடல் பூங்காவை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடி யில் டைட்டல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது .ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
தஞ்சாவூர் விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக வும் தொழில்நுட்ப பயிற்சி உருவா க்குவதற்காகவும், இந்த டைட்டல் பூங்காவை முதல்வர் அமைத்துள் ளார் .இதன் கட்டுமான பணி முழு மையாக முடிவடைந்துள்ளதால் பூங்காவை சில வாரங்களில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
இந்தப் பூங்காவில் இதுவரைஇரு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னு ம் ஏழு நிறுவனங்கள் தொடங்குவ தற்கு காத்திருக்கின்றன. எனவே திறப்பு விழாவுக்கு முன்பே நிறுவ னங்கள் முழுமையாக வந்துவிடும் மேலும் நிறுவனங்கள் முன் வந்தா ல் அருகில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டப்படும். இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதே போல் விழுப்புரத்தில் டைட்ட ல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பணிகள் நடைபெற்று வருகிறது. உதகையில் மலைவாழ் மக்களுக்காக டைட்டல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் சிப்காட் பேட்டை அமைப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதில் பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக் கை எடுக்கப்படுகிறது. இதற்காக செங்கிப்பட்டி உள்ள காசநோய் மருத்துவமனையை அகற்ற போவ தாக சிலர் உள்நோக்கத்துடன் வதந்தி உருவாக்கி பரப்பி வருகின் றனர் .அதுபோல அகற்றும் எண்ண ம் இல்லை .காசநோய் மருத்துவ மனை உள்ள இடத்திற்கும் ,சிப்காட் தொழிற்பேட்டைக்கும் தொடர்பு இல்லை .மேலும் காசநோய் மருத்து வமனை தரம் உயர்த்தி, சிப்காட்க்கு பயனுள்ளதாக செய்யப்படும். என வே வதந்தி பரப்புவோர் மீது நடவடி க்கை எடுக்குமாறு கேட்டுக் கொள் கின்றேன் என்றார். ராஜா.
அப்போது உடனிருந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகை யில் :
அரசு பள்ளிகளின் நிகழாண்டு இதுவரை 3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் கூடு தல் இதையொட்டி தேவையான வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் செய்யப் படுகின்றன என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் உடன் இருந்தனர். சிப்காட் செயல் இயக்குனர் பிரகாஷ், எம்.பிக்கள் கல்யாண சுந்தரம், முரசொலி, எம்.எல்.ஏ டிகேஜி நீலமேகம், மேயர் சண் ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள் அருள்ராஜ், மரிய ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



