திருப்பூர், நவ. 25 –
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினால் மீட்கப்பட்ட கைபேசிகள் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொலைந்த மனுக்கள்
மற்றும் புகார்களின் காணாமல் போன கைப்பேசிகள் குறித்த அடிப்படையில், காவல்துறை தொழில்நுட்ப விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் மூலம் பல கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றில் ரூ. 14லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் கைப்பேசி காணாமல் போனால், உடனடியாக பொதுமக்கள் CEIR (Central Equipment Identity Register) போர்ட்டலில் https://ceir.sancharsaathi.gov.in என்ற முகவரியில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இது கைப்பேசியை விரைவாக கண்டறிய மிகுந்த உதவியாக இருக்கும்” என்று அறிவுரை வழங்கினார்.



