மதுரை மார்ச் 1,
மதுரையில் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்,
மதுரை திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம், வருகின்ற மார்ச் 18 ந்தேதி தேதியன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வந்து சேத்தியாவார்கள். எனவே, அன்றைய தினம் அதிகாலை 4 மணி அளவில் அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமி புறப்பாடாகி சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை இத்திருக்கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும் என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆலயத்தில் உள்ள கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் ஆடிவீதியில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதை இணை ஆணையர்/செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்