திருவண்ணாமலை மார்ச் 13
திவ.மலையில்
மாசி மக தினத்தன்று தந்தையான வல்லாள மகாராஜாவுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்வில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி கொண்டாப்பட்டு கிராமம் துரிஞ்சலாற்றில் உள்ள கவுதம நதிக்கரையில் மாசி மக தினத்தன்று அண்ணாமலையாரை மகனாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் தீர்த்தவாரி செய்து திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா, அண்ணாமலையாரின் தீவிர பக்தர். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரிடம் நின்ற போது தானே குழந்தையாக இந்த பிறவியில் தங்களுக்கு இருப்பேன் என்று தெரிவித்ததாக வரலாறு. வல்லாள மகாராஜா தனது இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தைப்பூச தீர்த்தவாரி தினத்தன்று அண்டை நாட்டின் மீது படை எடுத்து செல்லும் போது வல்லாள மகாராஜா இறந்ததாக அண்ணாமலையாருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி மேற்க்கொண்ட அண்ணாமலையார் மேளதாளம் இல்லாமல் கோயிலுக்கு திரும்பி வந்ததாக ஐதீகம்
சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 30 ம் நாளான மாசி மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றில் உள்ள கவுதம நதிக்கரையில் வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுப்பது 200 வது ஆண்டாக இந்த ஆண்டு மாசி மாதம் மகம் நட்சத்திரம் அண்ணாமலையார் வழிநெடுக பக்தர்களுக்கு காட்சியளித்து, தனது தந்தையாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு கவுதம நதிக்கரையில் தீர்த்தவாரி செய்து திதி கொடுத்தார்.
சிவச்சாரியார்கள். சூலத்துடன் முன்று முறை நீரில் முழ்கி பின்னர் சூலத்திற்கு சந்தனம்,பால்,தேன்,விபூதி,மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனையுடன் தீர்த்தவரி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கவுதம நிதிக்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர்.