மதுரை மார்ச் 23,
மதுரை மாநகராட்சி நத்தம் மெயின் ரோடு, திருப்பாலை மற்றும் நாராயணபுரம் ஆகிய பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மண்டலத் தலைவர் வாசுகி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.