தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவிலின் அறங்காவல் குழுத்தலைவராக அருணாசலம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமாரசுவாமி கோவில் புதிய அறங்காவலர்களாக கிருஷ்ணாபுரம் அருணாசலம், பண்பொழி இசக்கி, வட கரை பாப்பா, சாம்பவர்வடகரை சுமதி, அழகப்பபுரம் கணேசன் ஆகிய 5 பேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் அறங்காவலர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் கோமதி, ஆய்வாளர் சேதுராம் ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லதுரை, தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன்,
முத்துக்குமாரவேலு, ஆன்மிக அன்பர்கள் கிட்டு ராஜா, மாலையப்பன் பாண்டியராஜன், கல்யாண சுந்தரம், வெங்கட் நடராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டனர்.
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு

Leave a comment