திண்டுக்கல் ஜூலை 16,
திண்டுக்கல் மாவட்டம் ரவுண்ட் ரோடு புதூரில் போதைக்கு எதிராக டி ஓய் எப் ஐ அமைப்பு சார்பில் பாலா கிரிக்கெட் கிளப் மாபெரும் மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவானது இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர், சுமார் 250க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதல் பரிசாக ரூபாய் 15,000 வழங்கியவர் துறை ரத்தினம், நிறுவனர் ஜி டி என் கல்லூரி, இரண்டாவது பரிசாக ரூபாய் 12000 ராஜசேகரன் ஏடிஎம்கே ஒன்றிய செயலாளார், மூன்றாவது பரிசு ரூபாய் 8000 ராஜப்பா துணை மேயர், நான்காவது பரிசு ரூபாய் ஐந்தாயிரம் டி போஸ் லட்சுமி பார்லர் மற்றும் சிறப்பு பரிசாக ரூபாய் 3000 செந்தில்குமார் இன்ஜினியர், வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களை பொறியாளர் மதுபாலன், விளையாட்டு வீரர்களுக்கு சீருடையை கபிலன் ஆகியோர் வழங்கி விழாவை சிறப்பித்தனர். மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆர் சச்சிதானந்தம் பாராளுமன்ற உறுப்பினர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி, காவல் ஆய்வாளர் வி. வெங்கடாசலம் நகர் வடக்கு, செல்வராகவன் மதிமுக மாவட்ட செயலாளர், இரட்டை வழக்கறிஞர் விவேக் மற்றும் அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு மாலை 7 மணி அளவில் விழாவானது சிறப்பாக நிறைவுக்கு வந்தது.