மயிலாடுதுறையில் தவெக கட்சியினர் மறைந்த அரசியல் தலைவர்கள் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறற்து. மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் சேந்தங்குடி ஆர்ச் பகுதியில் இருந்து அக்கட்சியினர் புடைச்சூழ 500 க்ற்கும் மேற்பட்டோர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இனைச் செயலாளர் அமீன், மாவட்ட துணைச் செயலாளர் அறிவரசன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், நகர பொறுப்பாளர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், திலீப்குமார், சிவப்பிரகாசம், நித்யா, ரம்யா, ஜாஸ்மின், ரம்யாராணி, ஒன்றிய, நகர, பேரூராட்சி பொறுப்பாளர்கள், மனோகரன், ரமேஷ், கமல், ராஜா, வசந்த், ரவி, சந்தோஷ், ராஜ்குமார், ஹரிஷ்,சரவணன், சதீஷ்,பாலாஜி விமல்,மணிகண்டன் விக்னேஷ், பாண்டி, சூர்யா, மாரியப்பன் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள்,
விஜய், தினேஷ், சதிஷ், ராகுல், அன்பு,சுஷ்மிதா, ரமேஷ், பாரி, நடராஜன், ஜியாவுதி,கழக தோழர்கள், தோழிகள் கலந்து கொண்டனர்