திருப்பூர் மாவட்டம் மார்ச்: 10
கொங்கு மெயின் ரோடு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் அலுவலகத்தில் விவசாயம் மற்றும் தொழிலாளர் கட்சி நிறுவன தலைவர் விவசாய மணி ( எ) ஜி.சுப்பிரமணியம் புதல்வரும் விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் வழக்கறிஞருமான எஸ்.திலகவர்மா மற்றும் விவசாய சங்கத்தலைவரின் துணைவியாருமான எஸ்.சிந்தாமணி ஆகிய இருவரின் பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள்,மகளிர் அணியினர்,மற்றும் விவசாய கட்சி உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.