தருமபுரி மாவட்டம்,
அரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க உரிமைகளுக்கான வட்ட செயலாளர் ஷபானா தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலத்தில் வழங்குவதைப் போல தமிழக அரசும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும். மாதாந்திர உதவி தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே மாதாந்திர உதவித் தொகை வழங்கவேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கி ஊதியமாக ரூ.319யை குறைக்காமல் வழங்கிட வேண்டும். எட்டு மணி நேர வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்காமல்
4 மணி நேர வேலை வழங்க வேண்டும். பணிதள பொறுப்பாளர்களை மாற்றி புதியவர்களை பணியில் அமைத்திட வேண்டும்.
என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதில் மாற்றுதிறநாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனைவரையும் போலிசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.