சுசீந்திரம்.பிப்.2
சுசீந்திரம் அருகே உள்ள தாணுமாலையன் புதூர் பகுதியில் சந்திரன் 60 என்பவருக்கு சொந்தமான குடும்ப பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்திரன் பூஜைகள் செய்துவிட்டு கோவில் கதவை பூட்டி சென்றுள்ளார். மறுநாள் கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக சந்திரனுக்கு தகவல் தெரிந்துள்ளது. வந்து பார்க்கும் பொழுது கோயில் கதவை உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த அரை பவுன் தங்க நகையை திருடி கோவிலுக்குள் இருந்த வெள்ளிப் பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலுக்குள் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து வேறு ஏதும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சந்திரன்சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர் பின்பு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.