By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
திருப்பத்தூர்மாவட்டம்

வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்

Last updated: February 8, 2025 4:55 pm
February 8, 2025 33 Views
Share
SHARE

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும் என  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினார் 

 

 

திருப்பத்தூர்:பிப்:08, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வலியுறுத்தியும், ஆலங்காயம் பகுதியில் செயல்பட்டு ஜெயவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பங்குதாரர்களின்  சாதிய வன்கொடுமை செயலை கண்டித்தும், நெக்குந்தியில் அம்பேத்கரின் உருவ படத்தினை சேதப்படுத்திய சம்பவம் குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகர மன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமை வகித்தார்.

திருப்பத்தூர் தொகுதி செயலாளர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மண்டல துணை செயலாளர் கோவேந்தன்,

மாவட்ட செயலாளர் (வடக்கு) ஓம்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் கலா சண்முகம், பாராளுமன்ற தொகுதி செயலாளர் முருகேசன், திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் இர.பாஸ்கரன், கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் ஓவியர் அண்ணாமலை, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எ.ஜெ.சக்தி , ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜா, கிழக்கு  ஒன்றிய செயலாளர் குபேந்திரன், ஆம்பூர் நகர செயலாளர் சக்தி,மாதனூர் ஒன்றிய செயலாளர் சரவணன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வின்சென்ட்,மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன்,மாவட்ட ஓவியர் அணி அமைப்பாளர் பாலா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்டன உரை ஆற்றுகையில்: 

தமிழ்நாடு முழுவதும் சாதி தீண்டாமைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறது. வேங்கை வயல் சம்பவத்தை பொருத்த வரை யார் பாதிக்கப்ட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கை பதியும் போக்கு உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விசாரணைக்கு வந்தாலும் எந்த பலனும் இல்லை. இந்த சம்பவத்தின் உண்மை நிலையினை கண்டறிவதற்கு தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வந்தாலும் செவி சாய்க்கவில்லை. விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில், வேங்கை வயல் பகுதியில் முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரனை செய்யவில்லை. தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் காவல்துறை விடுதலை சிறுத்தைகள் கட்சியினை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அஇஅதிமுக, பாஜக கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த சம்பவம் மனித குலத்திற்கே பெரும் அவமானத்தை காட்டுகிறது.தலித் மக்கள் பெரும் கோபத்தோடு இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் தெளிவாக உள்ளார். வேங்கை வயல் நீதி கிடைக்கும் வரை போராடுவோம். திமுக அரசிற்கு எதிராக பாஜக செயல்படுகிறது. நாம் தமிழர் சீமான் மறைமுக பாஜக கூட்டணியினை செய்து வருகிறார். தலித்துகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்தவர்கள் வெற்று சாயம் பூசிக்கொண்டு தலித் மக்களுக்கு நல்லது செய்வது போல பொய் வேசம் போடுகிறார்கள். சாதிய ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் கட்சிகள் பாஜக,பாமக, நாம் தமிழர் கட்சி. ஆர் எஸ் எஸ் சங்பரிவார் கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறிவிட்டது. தந்தை பெரியாரை குறி வைத்து பேசும் சீமான், அயோத்திதாச பண்டிதர் கணக்கெடுப்பின்போது யாரும் இந்து என்று பதிவிடாதீர்கள்  என்று சொன்னவர். தந்தை பெரியாருக்கு முன்பே திராவிடத்தை பேசியவர்கள் ஆதிதிராவிடர்கள். சாதி வெறியோடு செயல்படும் வேலையை செய்து வருபவர் சீமான். வேங்கை வயல் பிரச்சினையை பேசாதது ஏன்? தலித் விரோத கட்சியாக நாதக,பாமக செயல்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் நடைப்பெற்ற சம்பவத்தை அரசியலாக்குகிறது பாஜக. வண்முறையை உருவாக்கும் கட்சியில் இருந்து வரும் வந்தேறி எச்.ராஜா என்று வண்மையாக கண்டித்து பேசினார்.

இந்த கண்டன நிகழ்ச்சியினை ஒன்றிய பொருளாளர்கள் சங்கர்,சரவணன், திருப்பத்தூர் நகர அமைப்பாளர் விக்கி, ஒன்றிய அமைப்பாளர் திருமாவிமல், கந்திலி ஒன்றிய அமைப்பாளர் இரா. விக்கி, ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை மணி, ஒன்றிய துணை செயலாளர் கோதண்டன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது. 

கண்டன நிகழ்ச்சியின் இறுதியில் இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல் அமர்நாத் நன்றியுரை வழங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

சாலைகள் அகலப்படுத்தும் பணி

March 13, 2025 17 Views
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
டெட்டனேட்டர் வைத்திருந்த வாலிபர் கைது
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?