நாகர்கோவில் ஜூன் 25
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி தலைமை அலுவலகத்தில் வைத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து சங்கு ஊதி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறி கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராய உயிர் இழப்பு ஏற்படுவதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்,
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.பச்சைமால், குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் டி.ஜாண்தங்கம் உட்பட மாநில கழக நிர்வாகிகள், குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், நாகர்கோவில் பகுதி கழகச் செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் ஜி.சுகுமாரன் வரவேற்புரையாற்றினார் 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீலிஜா நன்றியுரையாற்றினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.