கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அவரை முதலுதவி சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதன்படி கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உடலை அடக்கம் செய்வதற்காக கம்பம் சிவமடம் ஏ. ஒன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் அவர்களது குடும்பத்தாரின் சார்பில் சனிக்கிழமை கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதில் காவல்துறையினர் சிவ மடம் ஏ. ஒன். ராமகிருஷ்ணன்,சங்கிலி ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியவரை நல்லடக்கம் செய்தனர். இச்சம்பவத்தை கண்ட சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சிவ மடத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.