பூதப்பாண்டி – நவ -07-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள நன்றி குழி பகுதியை சேர்ந்தவர் மாஹீன் இவரது இரண்டாவது மகன் செய்ய துஅலி (27) இவர்கடல் தொழில் செய்து வருவதாகவும் 3_ மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வரும்போது தொழில் செய்த பணத்தில் உதாரி தனமாக பணத்தை செலவு செய்து விட்டு ஓரிரு நாட்களிலேயே மறுபடியும் கடல் தொழிலுக்கு சென்று வருவதாகவும் கடந்த ஒன்றாம் தேதியன்று 05.37 மணிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுஎனக்கு வாழ விரும்பவில்லை நான் முக்கூடல் ரோடு கள்ளுக்கடை பாலம் அருகே களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியதன் பேரில் 108_ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டதாக அவரது தாய் பாத்திமா (50) பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார் இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்