கன்னியாகுமரி,டிச.4-
நேச்சுரல் மென்ஸ் பிசிக்ஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் அஞ்சுகிராமம் வின்னர் ஜிம்,கோல்டன் ஜிம் சார்பில் நேற்று கன்னியாகுமரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை, கடலூர், திருச்சி,திருநெல்வேலி,தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு 12 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு இளைஞரும் தங்கள் கட்டுமஸ்தான உடல்வாகை முறுக்கேற்றி மேடையில் காட்டினர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆணழகனுக்கு கேடயம் அளிக்கப்பட்டு, ரூ. 2 லட்சம் வரை ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இளைஞர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர் பிரதீப் தெரிவித்தார்.
பரிசளிப்பு விழாவில் அசோஸியேஷன் மேடையில் இளைஞர்கள் தங்கள் கட்டுமஸ்தான உடல்வாக்கினை காட்டியபோது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த நிலையில் பார்வையாளர்கள் உற்சாகமாக விசில் அடித்து ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
பரிசளிப்பு விழாவில் அம்மஅ செல்வகுமார்,அசோசியேஷன் மாவட்ட தலைவர் ஸ்ரீ ராம், உறுப்பினர்கள் வனீஷ், ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாட்டினை நேச்சுரல் மென்ஸ் பிசிக்ஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் கன்னியாகுமரி மாவட்ட உறுப்பினர் பிரதீப், ராமஜெயம், வனீஷ், ராகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்