தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் துணைத்தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துமாலை, ஆனந்தி, உள்பட உறுப்பினர்கள் கடந்த வருடம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தொிவித்தும் மற்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனர்.
அதற்கு பதிலளித்து பேசிய வசுமதி அம்பாசங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. திம்மராஜபுரம் ஊராட்சி பேரூரணி, வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் முடிவைதானேந்தல் ஊராட்சி செல்வவிநாயகர் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தளவாய்புரம் ஊராட்சி மேலத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிாி ஊராட்சி நேருகாலணி, பாக்கியலட்சுமி நகாில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், பொன்ராஜ்நகர் குறுக்குத்தெரு மகேஸ்வாி நகர் பகுதியில் தார்சாலை அமைத்தல் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமாா், சுதா்சன், தொம்மை சேவியர், ஜெயகணபதி, முத்துலட்சுமி, செல்வபார்வதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சண்முகசுந்தாி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ண மாலா மச்சோடா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கஈஸ்வாி, நாராயணன், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.