வேலூர்_27
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன், இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது தாத்தா சின்னய்யா நாயக்கர் என்பவர் பெயரில் உள்ள பட்டா மற்றும் சிட்டா வழங்க கோரி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை ஐந்து முறை அணுகியதாகவும் இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு பதில் அளிக்காத காரணத்தால் 26-06-2024 காலை 11மணிக்கு மேல் ஊர் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோருடன் வந்து தனது தாத்தா பெயரில் உள்ள சுமார் 25 ஏக்கர் நிலத்தின் பட்டாவை வழங்க கோரி முற்றுகையிட்டனர். இதனால் தாசில்தார் அலுவலகம் முன்பு அரை மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் இந்த முற்றுகை போராட்டத்தை கைவிடவும் உங்கள் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என உறுதியளித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர். பின்னர் இப்பகுதியில் வழக்கம்போல் செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது.