By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
மதுரைமாவட்டம்

மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி

Last updated: November 25, 2024 12:03 pm
November 25, 2024 31 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 25,

 

மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டார். உடன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ வெங்கடேசன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது எனவும், தமிழக அரசு ஆய்வுக்குக் கூட அனுமதி வழங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியதோடு மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது எனவும் அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில், கருங்காலக்குடி, தும்பைப்பபட்டி, கச்சிராயன்பட்டி, அய்யாபட்டி ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதன் தொடர்ச்சியாக கருங்காலக்குடி ஊராட்சியில் ஐமுமுகவின் மாநிலச் செயலாளர் பொறி. பக்ருதீன் அலி அகமத். பங்கேற்று கீழ்கண்ட தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் கிராம சபையில் அங்கீகரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமையவுள்ள டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும், தொல்லியல் சின்னங்களும், பல்லுயிர்ச் சூழல்களும் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். வேதாந்தா டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எந்த அனுமதியையும் தமிழ்நாடு அரசு தரக்கூடாது. மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் இயற்றிடவும், அரசின் சார்பில் மேற்படி கனிமச் சுரங்கத்தை தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை எனும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசின் ஒப்புதலுடன் 2015. 51 ஹெக்டேரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனதத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, ஜிஆர்பி நிறுவனம்

August 30, 2024 34 Views
புதுக்கடையில் செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
நகைச்சுவை மாமன்றத்தில் 3 பேருக்கு சேவை செம்மல் விருது
18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?