மார்த்தாண்டம், ஆக. 20 –
மார்த்தாண்டத்தில் திடீர் ஆய்வு செய்ததில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் ஊழியர்கள் மார்த்தாண்டத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்பொழுது பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.



