நாகர்கோவில் ஜூலை 3
கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேற்று தக்கலை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது தலைமையில் மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இதில் மாவட்ட நிர்வாகிகள், தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ், மாவட்ட பொருளாளர் அக்பர், மாவட்ட மமக செயலாளர் சித்திக், மற்றும் மாவட்ட துணை, அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் கண்டன உரையாக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்லானி, மாநில தலைமை கழக பேச்சாளர் திருவை செய்யத், மாநில தலைமை பிரதிநிதி காதர் மைதீன், மாவட்ட துணை தலைவர் உவைஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்..
மேலும் இந்த நிகழ்வில் தமுமுகவை சேர்ந்த குளச்சல் நகர தலைவர் மாகின், குளச்சல் நகர செயலாளர் ரிபாய் கான், மாவட்ட துணை செயலாளர் பயாஸ் ஹக்கீம், நகர துணை செயலாளர் காஜா மைதீன்,குளச்சல் சமூக ஆர்வலர் சபீர் கான் .ஊர் மக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.