மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, உயர்கல்வித்துறை சார்பாக, கிருஷ்ணகிரி அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில், ரூ.6 கோடியே 72 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தல் மற்றும் பர்கூர் அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில் ரூ.2 கோடியே 33 இலட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலும், பர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் ரூ.1 கோடியே 67 இலட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள ஆய்வகங்கள் மற்றும் கழிவறை தொகுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.



