ஈரோடு ஜூன் 1
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் உதவி தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது
அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ம் தேதி நடைபெற உள்ளது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையானது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேஜைகளில் எண்ணப்பட உள்ளது எனவே உதவி தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்து
வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் ஒன்று முதல் 14 வரை உள்ள அனைத்து மேஜைகளிலும் வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் வாக்கு எண்ணிக்கையானது ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிப்பு பலகையில் முறையாக எழுதப்பட வேண்டும்
வாக்கு எண்ணும் அறைக்கு தேவையான குடிநீர் இருக்கைகள் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் முகவர்களுக்கான தனி வழிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் )ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.