ராமநாதபுரம். பிப்.21-
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரை கண்டித்து கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் திருலோகசந்தர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் விஜயராமலிங்கம் விளக்க உரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் நீதிராஜா சிறப்புரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில பணிமாறுதலில் அரசானை 10 க்கு புறம்பாக முறையற்ற வகையில் பணிமாறுதல் செய்தது ஊழியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு நியாயம் வேண்டாதவர்களுக்கு ஒரு நியாயம் என செயல்பட்டு வருகிறார்..வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களை மிரட்டுவது உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாநில பொதுச்செயலாளர நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.