மதுரை மே 26,
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அரங்கை குத்து விளக்கு ஏற்றி திறந்த ஆட்சியர் மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பள்ளிக்கல்வித்துறை அரங்கை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வானவில் மன்ற கருத்தாளர்களின் வகுப்பறை செயல்பாடுகளை விளக்க கேட்டறிந்தார். மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், மாற்றுத் திறனாளிகளின் செயல்பாடுகள், பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட கூறுகள் சார்ந்த ஆவணங்களை உற்று நோக்கி தன்னார்வர்களின் வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை பற்றி கலந்துரையாடும் நிகழ்வு . இந்நிகழ்வில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆலோசனையின்படி மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி மாவட்ட திட்ட அலுவலர்கள், மதுரை மேற்கு ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்கு ஒன்றிய இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்ற அலங்காநல்லூர் ஒன்றிய தன்னார்வலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இல்லம் தேடி கல்வி வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், எண்ணும் எழுத்தும் வகுப்பறை நிகழ்வை விளக்கிய ஆசிரியர், வானவில் மன்ற மாவட்ட ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்



