காஞ்சிபுரம் ஏப்ரல் 15
காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில்
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் பல்வேறு இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எ.வி.எம் வினோத் தலைமையில், ஆறப்பாக்கம், வேடல், அவளூர், களக்காட்டூர், தம்மணூர் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
தர்பூசணி பயிரிடப்பட்ட விவசாயிகளின் நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் அதனை சிறிதளவு மீட்க வேண்டும் என்ற நோக்கில் பல டன் எடையுள்ள தர்பூசணி பழங்களை தெற்கு ஒன்றியத்தில் உள்ள விவசாயகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு இளையனார் வேலூர் – வாலாஜாபாத் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு விவசாயம் காப்போம், விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வோம் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்
தர்பூசணியை பெற்று கொண்ட அனைவரும் விவசாயம் காப்போம் என கூறி தமிழக வெற்றி கழக இளைஞர்களின் செயலை வெகுவாக பாராட்டி சென்றனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார் உதயன் சுகன் விஜி பார்த்திபன் சதீஷ் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.